தந்தை இறந்த சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை.. கதறும் தாய்.!

தந்தை இறந்த சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை.. கதறும் தாய்.!



Son hangs himself in grief of father's death.. Screaming mother..!

திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியிலுள்ள சேடன்குட்டை தெருவில் முருகன் - அனுராதா தம்பதியினர் தனது மகன் ரஜினிகாந்துடன் வசித்து வந்துள்ளனர். ரஜினிகாந்த் ஓரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த முருகன் திடீரென இறந்துள்ளார். அவரின் இறப்பு உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இறுதி சடங்குகளை முருகனின் மகன் ரஜனிகாந்த் நிறைவேற்றியுள்ளார்.

father died

அதனை தொடர்ந்து தந்தையின் இறப்பை ஏற்க முடியாமல் ரஜனிகாந்த் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் சம்பவத்தன்று ரஜனிகாந்த் அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் ரஜனிகாந்த் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்த அவரது தாய் அனுராதா அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். 

அப்போது அனுராதாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் திண்டிவனம் டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ரஜினிகாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.