யாருக்கும் இப்படி நடக்கவே கூடாது.. டீ குடிக்க பைக்ல போன மனுஷன்.. விஷயம் தெரிந்ததும் அதிர்ந்துபோன மக்கள்..

யாருக்கும் இப்படி நடக்கவே கூடாது.. டீ குடிக்க பைக்ல போன மனுஷன்.. விஷயம் தெரிந்ததும் அதிர்ந்துபோன மக்கள்..



snake-bite-a-man-who-travelled-in-a-bike

பைக்கில் சென்றுகொண்டிருந்த நபரை பைக்கில் மறைந்திருந்த பாம்பு ஒன்று கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் முப்பிடாதி. இவர் நேற்று காலை தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த கடை ஒன்றுக்கு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சிறிது தூரம் சென்றபிறகு அவரது காலில் ஏதோ கடிப்பது போல் உணர்ந்துள்ளார்.

ஏதாவது பூச்சியாக இருக்கலாம் என நினைத்து தொடர்ந்து அவர் பைக்கை ஓடியுள்ளார். அப்போது மீண்டும் அவரது காலில் ஏதோ கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்க முற்பட்டபோது வண்டியில் மறைந்திருந்த நல்ல பாம்பு ஒன்றை அவரை மீண்டும் இரண்டுமுறை கொத்தியுள்ளது.

இதனால் பதறிப்போய் வண்டியை அங்கையே போட்டுவிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்காக அழைத்துள்ளார். உடனே அங்கு வந்த மக்கள் அவரை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதினார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதனிடையே இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை அந்த பகுதி மக்கள் வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பாம்பு வாகனத்தின் உட்புறம் சென்று மறைந்துகொண்டதால் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின் அவர்கள் அந்த பாம்பை வாகனத்தில் இருந்து மீட்டு காட்டு பகுதியில் விடுவித்துள்ளனர்.

தற்போது குளிர் காலம் என்பதால் இதுபோன்ற விஷப்பாம்புகள் வாகனங்களில் பதுங்கும் அபாயம் இருப்பதாகவும், வாகனத்தை எடுக்கும்போது முழுமையாக சோதனை செய்துவிட்டு பின் எடுக்கவேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.