பாடகி வாணி ஜெயராம் உயிரிழப்பு... மர்ம மரணம் என வழக்கு பதிவு... பணிப்பெண் கூறிய தகவல்...!

பாடகி வாணி ஜெயராம் உயிரிழப்பு... மர்ம மரணம் என வழக்கு பதிவு... பணிப்பெண் கூறிய தகவல்...!


Singer Vani Jayaram's death... Case registered as mysterious death... Information given by the maid...

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் பாடல்கள் பாடிய மிகச் சிறந்த பாடகி வாணி ஜெயராம் உயிரிழப்பு மர்ம மரணம் என வழக்கு பதிவு.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 

அவரது உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாடகி வாணி ஜெயராம் (78) அவரது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், வாணி ஜெயராம் வீட்டு பணிப்பெண் மலர்கொடி செய்தியாளர்களிடம், இன்று காலை  நடந்த விவரம் குறித்த என்ற தகவலை கூறியுள்ளார். 

அதில் வாணி ஜெயராம் அவரது வீட்டில் தனியாகத் தான் வசித்து வருகிறார். கடந்த பத்து வருடங்களாக வீட்டில் உள்ள எல்லா வேலையும் நான் தான் செய்வேன். வழக்கம்போல இன்றைக்கு காலை 10.45 மணிக்கு நான் வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடித்தேன். ஐந்து முறை அடித்தும் அவர் கதவை திறக்கவில்லை. 

எனவே போன் செய்து பார்த்தேன். போனை எடுக்கவில்லை. என் கணவருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவரும் வாணி ஜெயராமிற்கு போன் செய்து பார்த்தார் அப்போதும் அவர் போன் எடுக்காததால், சந்தேகமடைந்து கீழ் வீட்டில் இருப்பவர்களிடம் விஷயத்தை கூறினேன். 

அதன் பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தோம். அவர் நல்ல உடல் நலத்துடன் தான் இருந்தார். பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்த வண்ணம் இருந்தது. 

அவர் எதற்காகவும் சிகிச்சையும் எடுக்கவில்லை. ஆரோக்கியமாக தான் இருந்தார். தற்போது நெற்றியில் காயம் இருக்கிறது என மலர்கொடி கூறியுள்ளார். வாணி ஜெயராம் மரணம் மர்ம மரணம் என ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.