"யாருக்கு ஓட்டு போடனும்.?" மரியான் பட நடிகையின் வைரல் பதிவு.!
பள்ளிக்கு சென்று விடுப்பு எடுத்துவிட்டு வருகிறேன் என கூறிச்சென்ற 25 வயது ஆசிரியை! பேரூந்துநிலையத்தில் நடந்த சோக சம்பவம்!
பள்ளிக்கு சென்று விடுப்பு எடுத்துவிட்டு வருகிறேன் என கூறிச்சென்ற 25 வயது ஆசிரியை! பேரூந்துநிலையத்தில் நடந்த சோக சம்பவம்!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகள் பிரியா(25). பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுடைய உறவினரின் திருமண விழாவில் கலந்துகொள்ள குடும்பத்தினருடன் கோவை மாவட்டத்திற்கு செல்வதற்கு சேகர் திட்டமிட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் பிரியா தன்னுடைய தாயாரிடம், பள்ளிக்கு சென்று விடுப்பு எடுத்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல், மதியம் 1 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு சென்று விஷம் குதித்துள்ளார்.
பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கையிலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்த பிரியா சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பிரியா தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் பள்ளிக்கூட ஆசிரியை பிரியா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.