கொஞ்ச கொடுமையா பண்ணிருக்காங்க... இவர்கள் யாரையும் சும்மா விடக்கூடாது.! கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு.!

கொஞ்ச கொடுமையா பண்ணிருக்காங்க... இவர்கள் யாரையும் சும்மா விடக்கூடாது.! கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு.!



school-student-suicide-D7N3H6

கோவை மாவட்டம் ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்தநிலையில் அந்த மாணவி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் பார்த்து பேரதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது தற்கொலைக்கு முன்பு அந்த மாணவி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

அந்த கடிதத்தில், ஆசிரியர் உள்ளிட்ட சிலரின் பெயரை எழுதிவைத்துவிட்டு, இவர்கள் யாரையும் சும்மா விடக்கூடாது என எழுதியுள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.