திருமணமான 23 வயது இளம்பெண் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம்: வீடுபுகுந்து துணிகரம்.!

திருமணமான 23 வயது இளம்பெண் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம்: வீடுபுகுந்து துணிகரம்.!



Salem 23 Aged Young Girl Sexual Abused 

 

சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவல்லி, பெரியசோரகை பகுதியில் திருமணமான 23 வயது இளம்பெண், தனது கணவருடன் வசித்து வருகிறார். 

தம்பதிகளுக்கு 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 04ம் தேதி பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றுள்ளார்.   

வீட்டில் தனது மகளுடன் இளம்பெண் தனியே இருந்துள்ளார். அச்சமயம், சிரங்கனூர் கிராமத்தை சேர்ந்த இருசாக்கவுண்டன் (வயது 25) என்பவர், பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்துள்ளார். 

அங்கு கத்தி முனையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். 

இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி கடந்த சில நாட்களாகவே மனஉளைச்சலில் தவிக்கவே, நேற்று கணவரிடம் விபரத்தை தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.