கள்ளக்காதல் உறவால் கர்ப்பம்.. திருமணத்திற்கு வற்புறுத்திய பெண்ணை குட்டையில் மூழ்கடித்து கொலை செய்த கொடும்பாவி.!

கள்ளக்காதல் உறவால் கர்ப்பம்.. திருமணத்திற்கு வற்புறுத்திய பெண்ணை குட்டையில் மூழ்கடித்து கொலை செய்த கொடும்பாவி.!



Ramanathapuram Missing Girl Died Body Found Thanjavur Pond Affair Man Did Murder

4 மாதங்களுக்கு முன்பு மாயமான பெண்மணி, குட்டையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாத்தியனேந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் வாசுகி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாயமான நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், மாதவன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாதவனுக்கும் - வாசுகிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் ஒருகட்டத்தில் நெருங்கி பழகியதால் வாசுகி கர்ப்பமாகவே, அவர் மாதவனிடம் திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். வாசுகி கர்ப்பமான செய்தியை அறிந்த மாதவன், அவரை கைவிட்டு தஞ்சாவூர் அருகேயுள்ள செங்கிபட்டிக்கு வேளைக்கு சென்றுள்ளார்.

ramanathapuram

இதற்கிடையில் வாசுகியின் கர்ப்பம் தொடர்பான தகவல் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் வாசுகி மாதவனை தேடி தஞ்சாவூர்க்கு சென்றபோது, மாதவன் தனது சகோதரர் திருக்கண்ணனுடன் சேர்ந்து குட்டை நீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்கின்றனர். 

இதனையடுத்து, மாதவன் வாசுகியை கொலை செய்த குட்டைக்கு நேரில் அழைத்து சென்ற காவல் துறையினர், அங்கிருந்த பெண்ணின் எஞ்சிய உடல் பாகத்தை மீட்டெடுத்தனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.