3 மணி நேரத்தில் கொட்டித்தீர்க்கபோகும் மழை!!

3 மணி நேரத்தில் கொட்டித்தீர்க்கபோகும் மழை!!



Rain in next 3 hours

இன்று மாலை 5 மணி அளவில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான வானகரம், மதுரவயால், திருவேற்காடு, பூவிருந்தவல்லி பகுதிகளில் கனமழையானது திடீரென பெய்தது.

தொடர்ந்து 1 மணிநேரம் பெய்த மழையினால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளுமையாக காணப்படுகிறது. மேலும், இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்று இரவு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.