சென்னையில் நள்ளிரவில் இருந்து விடாது பெய்து வரும் மழை.! குளிர்ச்சியில் சென்னை.!

சென்னையில் நள்ளிரவில் இருந்து விடாது பெய்து வரும் மழை.! குளிர்ச்சியில் சென்னை.!


rain in chennai

வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதேபோல், சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்தக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

rainஇந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் அதிகாலை வரை லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோயம்பேடு, எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.