பட்டப்பகலில் பூட்டை உடைத்து திருட முயன்ற வடமாநில இளைஞர்... சும்மா அடி நொங்கெடுத்த பொதுமக்கள்!!
பட்டப்பகலில் பூட்டை உடைத்து திருட முயன்ற வடமாநில இளைஞர்... சும்மா அடி நொங்கெடுத்த பொதுமக்கள்!!
சென்னை மாதவரத்தில் குளிர்பான கடை ஒன்றின் பூட்டை உடைத்து திருட முயன்ற வடமாநில இளைஞர் ஒருவரை பிடித்து அப்பகுதி பொது மக்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரம் தபால் பெட்டி பகுதியில் உள்ள மேரி என்பவருக்கு சொந்தமான குளிர்பான கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் இன்று பட்டப்பகலில் பூட்டிய கடையை வடமாநில இளைஞர் ஒருவர் உடைத்துள்ளார். இதனை அவதனித்த அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி உதை கொடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த இளைஞர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த துக்கான் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.