பொதுமக்களுக்கு குட் நியூஸ்… இன்று முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை!



Onion sale in ration shop

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நகர்ப்புறங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று  முதல் நகர்ப்புற நியாயவிலைக் கடைகளில் வெங்காய விற்பனை தொடங்குகிறது.

வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதன் விலை அதிகரித்துள்ளது. இதனால் அன்றாட சமையலுக்கு அத்தியாவசியமான வெங்காயத்தை வாங்குவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

tamilnadu

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தையில் அதிக விலைக்கு வெங்காயம் வாங்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பணம் சம்பாதிக்க ஆசையா உஷார்? உங்க வங்கிக்கணக்கை வாடகைக்கு விடுறீங்களா? தமிழ்நாடு முழுவதும் 837 பேர் கைது.! 

தமிழகத்தில் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதே தற்போதைய விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வெளிச்சந்தையில் விலை உயர்ந்துள்ள நிலையில், குறைந்த விலையில் வெங்காயத்தை பொதுமக்களுக்கு வழங்கும் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

tamilnadu

நகர்ப்புறங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்பனை தொடங்கப்படுவதால், குடும்ப அட்டைதாரர்கள் இதன் மூலம் பயன்பெற முடியும். ரூ.35-க்கு ஒரு கிலோ வெங்காயம் கிடைப்பது, குறிப்பாக விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "ஆணவம், அழிவுக்குத்தான் தொடை நடுங்கி அரசே" - உதயநிதி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் கொந்தளிப்பு.!