மொழிகளை கடந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்ற புஷ்பா 2 படத்தின் பாடல்..!
என்னையா வேலைய விட்டு தூக்குற... உன்னை என்ன பண்றேன் பாரு... முன்னாள் ஊழியரின் துணிகர செயல்!!
என்னையா வேலைய விட்டு தூக்குற... உன்னை என்ன பண்றேன் பாரு... முன்னாள் ஊழியரின் துணிகர செயல்!!
பெங்களூரு கோரமங்களா பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் ரெட்டி. இவரின் கடந்த 20 வருடங்களாக ஜெகதீஷ் என்ற நபர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஜெகதீஷின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் காணப்பட்டுள்ளது.
இதனை அவதனித்து வந்த ராஜகோபால் ரெட்டி, ஜெகதீஷை வேலையை விட்டு நீங்கியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ஜெகதீஷ் எப்படியாவது தனது எஜமானரை கொலை செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
அதன்படி தனது கூட்டாளிகள் 2 பேருடன் ராஜகோபால் வீட்டிற்கு சென்ற ஜெகதீஷ் அங்கிருந்த 2 பேரை கொலை செய்து விட்டு 5 லட்சம் பணம் மற்றும் 100 கிராம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.