ஆத்தா வந்துருக்கேன்...சாமி வந்ததாக நிர்மலாதேவி அரங்கேற்றிய கூத்து!! கதிகலங்கி போன நீதிமன்றம்!!

ஆத்தா வந்துருக்கேன்...சாமி வந்ததாக நிர்மலாதேவி அரங்கேற்றிய கூத்து!! கதிகலங்கி போன நீதிமன்றம்!!


nirmaladevi-act-weird-in-sivilliputhur-court

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நிர்மலா தேவி என்ற உதவி பேராசிரியை தனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளை தவறான பாதையில் செல்ல வழி நடத்த முயன்றதாக வழக்குப் பதிவு செய்து கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். 

இதனை தொடர்ந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த நிர்மலா தேவி இன்று வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது அவர் சிவப்பு நிற சுடிதார் பேண்ட் அணிந்து அதன்மேல் புடவை கட்டி, தலை நிறைய மல்லிகை பூ, கழுத்து நிறைய நகைகளுடன் வருகை தந்திருந்தார்.

nirmala devi

பின்னர் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த நிர்மலாதேவி நீதிமன்ற வாசற்படியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். ஆனால் காவல்துறையினர் அங்கு அமரக்கூடாது என வெளியேற்றியநிலையில் நீதிமன்ற வளாகத்திலேயே பெஞ்சில் அமர்ந்து மீண்டும் கண்களை மூடி  தியானம் மேற்கொண்டார்.மேலும் தனக்குத் தானே எதையோ முணுமுணுத்துகொண்டிருந்தார். பின்னர் தனது முடிகளை தானே வெட்டி, அதை தனது காதில் தொங்கவிட்டு கொண்டுள்ளார்.

பின்னர் கண்களை மூடிக்கொண்டு சாமி வந்தது போல பேச துவங்கிய நிர்மலாதேவி,  நான்தான் காமாட்சியம்மன் எனக்கு தீர்ப்பு வந்துவிட்டது மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் வெற்றி பெற்றுவிட்டேன். எனக்கு முடி நிறைய வளர வேண்டும் என்பதற்காக இப்படி பரிகாரம் செய்கிறேன்.அம்மா முடி நிறைய கொடுப்பாள் என ஏதேதோ பேசிக் கொண்டிருந்துள்ளார்.

nirmala devi

பின்னர் எனது மீது வழக்கு தொடர்ந்த மாணவிகள் அனைவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.கல்லூரியில் படிக்கும் நிறைய மாணவிகள் இறந்து விட்டார்கள் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.இவ்வாறு கண்களை மூடிக்கொண்டு சாமி வந்தது போல பேசிய நிர்மலா தேவியை கண்டு அங்கிருந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.