அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
தலை தீபாவளி கொண்டாட புது மனைவியுடன் பைக்கில் சென்ற கணவன்.. ஊருக்கு திரும்பும்போது நடு வழியில் காத்திருந்த அதிர்ச்சி
தலை தீபாவளி கொண்டாட புது மனைவியுடன் பைக்கில் சென்ற கணவன்.. ஊருக்கு திரும்பும்போது நடு வழியில் காத்திருந்த அதிர்ச்சி
மோட்டார் சைக்கிளில் லாரி மோதிய விபத்தில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டு செல்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் ராமர் (25). இவருக்கும் நதியா நதியா என்ற பெண்ணிற்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்துள்ளது. எலக்ட்ரிஷியனாக வேலைபார்த்து வரும் ராமர் சென்னை தாம்பரத்தில் தனது மனைவியுடன் தங்கி வேலை பார்த்துவந்துள்ளார்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் தங்கள் சொந்த ஊருக்கு தல தீபாவளி கொண்டாட சென்றுள்ளனர். தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து பின் இருவரும் மோட்டார் சைக்களில் சென்னை தம்பரத்திற்கு திரும்பியுள்ளனர். உளுந்தூர் பேட்டை அருகே வாகனம் வந்துகொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்றி இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி தூக்கி வீசியுள்ளது.
இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.