பதவியை பிடிக்க மாட்டு சாணம் அள்ளி ஓட்டு சேகரித்த அ.தி.மு.க. வேட்பாளர்... எங்கு தெரியுமா.?

பதவியை பிடிக்க மாட்டு சாணம் அள்ளி ஓட்டு சேகரித்த அ.தி.மு.க. வேட்பாளர்... எங்கு தெரியுமா.?



New style handwashing of ADMK candidate

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வேட்பாளர்கள் அந்த அந்த பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் 11-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தனது வார்டிலுள்ள சதாசிவநகர், இந்திரா நகர், தாயப்பாதோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

Admk

வாக்கு சேகரிப்பின் போது ஒரு படி மேலே சென்று வித்தியாசமான முறையில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்துள்ளார். அதாவது வீடுகளின் முன்பு கட்டப்பட்டிருந்த பசுமாடுகளின் சாணங்களை அள்ளியும், டீ கடையில் டீ போட்டு கொடுத்தும், பஜ்ஜி சுட்டு கொடுத்தும் வித்தியமான முறையில் அதிமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.