நிவர், புரெவி புயலை தொடர்ந்து மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்.!

நிவர், புரெவி புயலை தொடர்ந்து மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்.!


new cyclone formed

வங்க கடலில் கடந்த மாதம் 28-ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து, புயலாக நேற்று முன்தினம் மாலை வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடைகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது, இன்று பாம்பனுக்கு தென்கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே சுமார் 550 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

strom

இந்த புயலானது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை கடக்கிறது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மலாய் தீபகற்பம் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வலுவடைந்து நிவர் மற்றும் புரெவி என இரண்டு புயல்களாக மாறிய நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.