திருமண பந்தல் போடும்போது வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி.!

திருமண பந்தல் போடும்போது வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி.!



marriage-decoration-collapse-8-years-old-boy-death

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராஜசேகர். இவரது மகன் கனிஷ். இந்த சிறுவன் அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ராஜசேகரின் தம்பி பீட்டருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், தங்களது பழைய ஓட்டு வீட்டின் முன்பக்கம் உள்ள கூரை கொட்டகையில் இருந்த கீச்சுகளை அகற்றிவிட்டு பந்தல் போடுவதற்கான வேலை நடைபெற்றுள்ளது.

thiruvarur

அப்போது கூரை கொட்டகையில் உள்ள மன்சுவர் திடீரென இடிந்து சிறுவன் மீது விழுந்துள்ளது. சுவர் மேலே விழுந்ததில் சிறுவன் கட்ட முடியவில்லை. இதில் இழிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளான்.

இதனை யாரும் கவனிக்காததால் சிறுவனுக்கு திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளான். சிறிது நேரம் கழித்து தான் குடும்பத்தினர் சிறுவனை தேடிய நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தது தெரிய வந்தது.

thiruvarur

இதனையடுத்து உடனடியாக சிறுவனை மீட்ட குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.