45 வயது தொழிலதிபரை திருமணம் செய்ய போகிறோம் என்ற ஆசையில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

45 வயது தொழிலதிபரை திருமணம் செய்ய போகிறோம் என்ற ஆசையில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!



man-cheated-women

சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 40 வயது நிரம்பிய பெண் ஒருவர், காவல்நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில், எனக்கு திருமணமாகி 13 வயதில் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கணவனை பிரிந்து வாழ்கிறேன். இதனையடுத்து நான் மறுமணம் செய்து கொள்வதற்காக ஒரு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தேன். 

அதில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 45 வயது நிரம்பிய மனோகரன் என்பவர் தன்னை பணக்கார தொழிலதிபர் என்றும், தானும் விவாகரத்து ஆனவர் என்றும் அறிமுகம் ஆனார். இதனால் நான் அவரை திருமணம் செய்ய விரும்பினேன். அவரும் ஒப்புக்கொண்டார். பின்னர் இருவரும் பழகினோம். நான் அவருக்கு செல்போன் உள்பட விலையுயர்ந்த பல பொருட்களை பரிசாக அளித்தேன். 

Women

இந்தநிலையில் தனக்கு மருத்துவ செலவுக்கு ரூ.10 லட்சம் தேவைப்படுகிறது என்று கேட்டார். என்னை திருமணம் செய்ய போகிறார் என்ற நம்பிக்கையில் அவர் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினேன். ஆனால் அதன்பின்னர் அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை. எனவே தன்னை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மனோகரன், திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆந்திரா மாநிலம் சித்திதூரில் வசித்து வந்ததும், இதேபோன்று பல பெண்களை திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து மனோகரனை போலீசார் கைது செய்தனர்.