காதல், காமம், கர்ப்பம்! 21 வயது இளம்பெண்ணை நாசமாக்கிய 33 வயது நபர்! ஒரு அதிர்ச்சி செய்தி!
காதல், காமம், கர்ப்பம்! 21 வயது இளம்பெண்ணை நாசமாக்கிய 33 வயது நபர்! ஒரு அதிர்ச்சி செய்தி!

இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பலமுறை உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.
நிலக்கோட்டை அருகேயுள்ள என். புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். 33 வயதாகும் இவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி குடுத்துவிட்டு ஆறுமுகம் அந்த பெண்ணுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஆறுமுகத்திடம் கேட்டுள்ளார்.
ஆறுமுகம் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததோடு கொலைசெய்விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அந்த பெண் இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இளம் பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.