அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
இப்போதைக்கு இவர்களின் வங்கிகணக்கில் மட்டும் தான் ரூ.2500... தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு....! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!!
மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தமிழ்நாடு முழுவதும் பெண்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்த தகவல்களும் தற்போது கவனம் பெற்று வருகின்றன.
தற்போதைய பயனாளிகளுக்கு முன்னுரிமை
வெளியாகியுள்ள தகவலின்படி, உதவித்தொகை உயர்வு நடைமுறைக்கு வந்ததும், தற்போது திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மகளிர் உரிமைத் திட்டம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே முதற்கட்டமாக கூடுதல் தொகை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!
நிலுவை விண்ணப்பங்கள் மீண்டும் ஆய்வு
இதையடுத்து, முந்தைய கட்டங்களில் விண்ணப்பித்தும் பல்வேறு காரணங்களால் தேர்வு செய்யப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மீண்டும் விரிவாக பரிசீலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தகுதியானவர்களை திட்டத்தில் இணைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பின் புதிய விண்ணப்பங்கள்
தற்போதைய பயனாளிகளுக்கான தொகை உயர்வு மற்றும் நிலுவை விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் நிறைவடைந்த பிறகே, புதிய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது. ₹2,500 உதவித்தொகை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500....! அமைச்சர் சொன்ன சூசக பதில்.... அப்போ நாளை தெரிஞ்சுடும்!