விவசாய நிலத்தில் மது அருந்துவதை தட்டிக்கேட்டதால் பயங்கரம்; இளைஞர் 4 பேர் கும்பலால் வெட்டிக்கொலை.!

விவசாய நிலத்தில் மது அருந்துவதை தட்டிக்கேட்டதால் பயங்கரம்; இளைஞர் 4 பேர் கும்பலால் வெட்டிக்கொலை.!



Madurai man Killed my Gang when Condemn Liquor Activity  

 

வயல்வெளியில் மதுபானம் அருந்துவதை கண்டித்து, தூரமாக சென்று மதுகுடிக்க அறிவுறுத்திய நபர் கொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கீழையூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவருக்கு சொந்தமாக வயல் இருக்கிறது. இந்நிலத்திற்கு அருகாமையில் புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அது சார்ந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், நேற்று இவர் வயலுக்கு சென்றபோது, அங்கு 4 பேர் கும்பல் மதுபானம் அருந்தி இருக்கிறது. இதனைக்கண்ட நாராயணன், விவசாய நிலத்தில் இருந்து தூரமாக சென்று மதுஅருந்துமாறு கூறி இருக்கிறார். 

இதனால் ஆத்திரமடைந்த கும்பல், லட்சுமி நாராயணனை கடுமையாக தாக்கி இருக்கிறது. மேலும், தங்களிடம் இருந்த பயங்கர ஆயுதத்தால், அவரை வெட்டிக்கொலை செய்து தப்பி சென்றுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.