காதல் திருமணம்.. 5 மாத கர்ப்பிணி மனைவி வரதட்சணைக்காக மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை.! .கணவன் வெறிச்செயல்.!!

காதல் திருமணம்.. 5 மாத கர்ப்பிணி மனைவி வரதட்சணைக்காக மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை.! .கணவன் வெறிச்செயல்.!!


Madurai Love Married Man Kills 5 Month Pregnant Wife Dowry Issue

காதலித்து கரம் பிடித்த காதல் மனைவியை, கர்ப்பிணி என்றும் பாராது வரதட்சணைக்காக மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி ராஜா. இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக நாகலட்சுமி என்ற பெண்மணியை, பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளார். 

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை நாகலட்சுமி மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நாகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகலட்சுமியின் அண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக கணவன் கணபதி ராஜாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கையில், நாகலட்சுமியை மணந்து கொள்ள அவரது சகோதரர்களிடம் இருந்து காதலன் 10 சவரன் நகை வரதட்சணையாக கேட்டதும், அதனை அவர்கள் தர மறுத்த நிலையில் நாகலட்சுமி மணந்து கொண்டுள்ளார். 

madurai

வரதட்சணை ரீதியாக கணவன் - மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், வரதட்சனை கிடைக்காத விரகத்தில் நாகலட்சுமியை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தும் அம்பலமானது. விசாரணைக்கு பின்னர் கணபதி ராஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

காதல் திருமணம் செய்த கணவன், 10 சவரன் நகைக்காக ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.