அட இது தெரியாம போச்சே.. இயக்குனர் அட்லீக்கு விரைவில் டாக்டர் பட்டம்.!
ஹாஸ்டல் கழிவறைக்குள் சென்ற இளம் பெண்! உள்ளே காத்திருந்த அதிர்ச்சி! அலறிய பெண்கள்!

கோவை மாவட்டம் ராமநாதபுரம் என்னும் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் மகளிர் விடுதி ஓன்று செயல்பட்டுவருகிறது. படிக்கும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் அந்த விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அந்த விடுதியில் இருக்கும் அறை ஒன்றில் தங்கியிருக்கும் இளம் பெண் ஒருவர் தங்கள் அறையில் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறையில் வெஸ்டர்ன் டாய்லெட் அருகே ஏதோ நெளிவதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காரணம் மிகப்பெரிய பாம்பு ஓன்று கழிவறையில் இருந்துள்ளது. உடனே கழிவறையை பூட்டிவிட்டு, இதுகுறித்து மற்ற பெண்களுக்கு அவர் தெரிவிக்க, அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்களும், பாம்பு பிடிக்கும் நபர் ஒருவரும் கழிவறையை திறந்து பார்த்துள்ளனனர்.
கழிவறைக்குள் மிக கொடிய விஷம் கொண்ட ராஜ நாக பாம்பு படம் எடுத்து ஆடியுள்ளது. பின்னர் லாவகமாக பாம்பை பிடித்து அருகில் இருக்கும் காட்டு பகுதியில் விட்டுள்ளனர். இதுபோன்ற பாம்புகள் வீட்டின் அருகில் இருக்கும் மரக்கிளைகள் வழியாக வீட்டிற்குள் வர வாய்ப்பிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பாம்பு மிக மிக கொடிய விஷம் கொண்டது எனவும், நல்ல வேளை யாரையும் கடிக்கவில்லை, கடித்திருந்தால் உயிரே போயிருக்கும் என கூறியுள்ளனர். மேலும், அந்த பகுதியில் அந்த பாம்பின் முட்டை ஏதும் உள்ளதா எனவும் அவர்கள் சோதனையிட்டுள்ளனர்.
அந்த பெண்ணின் எச்சரிக்கையால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. பாம்பு உள்ளே நுழைந்தது அந்த பகுதியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.