இதுதான் என்னுடைய கொள்கை.! அரசியல் என்ட்ரி குறித்து செம தெளிவாக நடிகர் ராகவா எடுத்துள்ள முடிவு!!
2 பேர் கொடூரக் கொலை.. புதைக்குழியில் கொலையாளி.. போலீசார் தீவிர விசாரணை!
2 பேர் கொடூரக் கொலை.. புதைக்குழியில் கொலையாளி.. போலீசார் தீவிர விசாரணை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 பேரை கொடூரமாக கொலை செய்து விட்டு கொலையாளி புதைக் குழியில் மறைந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள போய்சர் மாவட்டத்தில் கூடன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மனநலம் குன்றிய கிஷோர் குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த முதியவர்கள் இருவரை கோடரியால் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் அருகில் உள்ள காட்டில் உள்ள புதைக்குழியில் மறைந்து கொண்டார். இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் கொலையாளியான மனநலம் பாதிக்கப்பட்ட கிஷோர் குமாரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் தற்கொலை செய்வதற்காக புதை குழியில் இறங்கினாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டு கீழே இறங்கினாரா என்று போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.