திருமணம் ஆகாததால் ஏக்கம்; விரக்தியில் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை.!

திருமணம் ஆகாததால் ஏக்கம்; விரக்தியில் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை.!



Kanyakumari Man Suicide Died No Marriage at the age of 33 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி, வாண்டாவிளை பகுதியில் வசித்து வருபவர் ரத்தின சாமி. இவரின் மனைவி ஜானகி. தம்பதிகளுக்கு 2 மகள்கள், சதாசிவம் என்ற 33 வயதுடைய மகன் என 3 பிள்ளைகள் இருக்கின்றனர். மகள்களுக்கு திருமணமாகி கணவர் வீட்டுடன் வசித்து வருகிறார்கள். ரத்தினசாமி சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட, ஜானகி மற்றும் சதாசிவம் தற்போது ஒன்றாக வசித்து வருகிறார்கள். 

கொத்தனார் வேலைக்கு சென்றுவந்த சதாசிவம், தனக்கு திருமணமாகாத விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று விரக்தியின் உச்சக்கட்டத்தில் இருந்தவர் தென்னந்தோப்பில் இருக்கும் தென்னை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலை ஊர்மக்கள் சதாசிவம் சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டுள்ளனர். 

பின் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் சதாசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த இராஜாக்கமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொத்தனார் திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சோகம், அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.