பார்வை தெரியாத 13 வயது சிறுமிக்கு விடிய விடிய நேர்ந்த கொடுமை.. விடிந்தபின் வெளிவந்த உண்மை.!

பார்வை தெரியாத 13 வயது சிறுமிக்கு விடிய விடிய நேர்ந்த கொடுமை.. விடிந்தபின் வெளிவந்த உண்மை.!



JCB operator raped 13 years old girl in chengalpattu

செங்கல்பட்டு அருகே பாலூர் அடுத்த வில்லியம்பாக்கம் இருளர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கண்பார்வை குறைபாடு இருந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக மறைமலைநகர் அடுத்துள்ள சட்டமங்கலத்தில் தனது உறவினர் சங்கர் என்பவரின் வீட்டில் கடந்த வாரம் சென்று சிறுமையை விட்டு விட்டு வந்தனர்.

Chengalpattu

இந்த நிலையில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வரும் சங்கரின் மகன் விஜயகுமாருக்கு (வயது 26) ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் இவர் தனது வீட்டிற்கு வந்த உறவினரின் கண் பார்வை குறைபாடு உள்ள சிறுமியை கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி கடந்த புதன்கிழமை காலை சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தெரியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அடுத்த நாள் காலை இருவரும் வீடு திரும்பினர். அப்போது சிறுமியிடம் அவரது பெற்றோர் எங்கே சென்றனர் என்று விசாரித்தனர். அப்போது சட்டமங்கலம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் ஒரு நாள் முழுவதும் வைத்து விஜய் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அழுது கொண்டே கூறியுள்ளார். 

Chengalpattu

இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த சிறுமியின் பெற்றோர் கூடுவாஞ்சரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விஜய் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.