திருச்சி: கல்லூரி விடுதி வளாகத்தில் சோகம்; மாணவி தூக்கிட்டு தற்கொலை.!



in Trichy Girl Suicide in College Hostel Campus 

 

கல்லூரியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகம் திருச்சியில் நடந்துள்ளது. 

திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் கேர் எஞ்சினியரிங் & கலை அறிவியல் க்ளோரோய் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி தமிழ்நாடு மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் குடும்பத்திற்கு சொந்தமானது ஆகும்.

இதையும் படிங்க: திருச்சி: பேனர் வைத்தபோது சோகம்; புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி மரணம்.! 

இக்கல்லூரியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் வசித்து வரும் 19 வயதுடைய திவ்யா என்ற மாணவி, பி.காம் பயின்று வந்துள்ளார்.

trichy

மாணவி தற்கொலை

இந்நிலையில், நேற்று முன்தினத்தில், இரவு நேரத்தில் விடுதியின் அறை வாசலில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து ராம்ஜி நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: யாசகம் பெற்று பிழைப்பு நடத்திய பெண்ணுடன் கள்ளக்காதல்.. கர்ப்பமானதால் கொலை.. திருச்சியில் பயங்கரம்.!