14 வயது சிறுமி வன்கொடுமை.. காட்டுப்பகுதியில் நடந்த அவலம்.. காதல் பெயரில் கொடூரம்.!
காட்டுப்பகுதியில் 14 வயது சிறுமியை காதலின் பெயரில் வன்கொடுமை செய்த திருமணமான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயில் திருவிழா பழக்கம்:
14 Year Old Girl Raped: திருச்சி மாவட்டத்தில் வசித்து வரும் 14 வயதுடைய சிறுமி, ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்னதாக உள்ளூரில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியிடம் இளைஞர் ஒருவர் பேச்சுக்கொடுத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகி கைது.. சென்னையில் ஷாக்.!
பள்ளிக்கு செல்வதாக புறப்பட்ட சிறுமி:
பின் சிறுமி இளைஞரிடம் செல்போன் நம்பரை கொடுத்ததாக தெரியவரும் நிலையில், இருவரும் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்து பேசத்தொடங்கி இருக்கின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் சிறுமி பள்ளிக்குச் செல்வதாக புறப்பட்டுள்ளார்.
காட்டுப்பகுதியில் கொடுமை:
வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுமி வாலிபருடன் கிளம்பியதாக கூறப்படும் நிலையில், சிறுமியை நாகமங்கலத்தில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமை துயரமும் நடந்துள்ளது. பின் சிறுமியை வீட்டருகே கொண்டு சென்று விட்டுச் சென்றுள்ளார்.

காவல்நிலையத்தில் புகார்:
இதனிடையே, சிறுமி பள்ளிக்கு வரவில்லை என பெற்றோருக்கு தொடர்புகொண்டு ஆசிரியர் தெரிவிக்கவே, வீட்டுக்கு வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்து இருக்கின்றனர். அப்போது நடந்ததை கூறவே, கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த இளைஞரின் அதிர்ச்சி செயல்:
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறுமியை வன்கொடுமை செய்தது திருச்சி நாகமங்கலம் பகுதியில் வசித்து வரும் பூபதி என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகளும் இருக்கின்றனர். விசாரணைக்குப்பின் பூபதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியின் கையை கடித்துக்குதறிய இளைஞன்.. சாலையில் அரங்கேறிய வெறிச்செயல்.!