தலைநிறைய பூவுடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த குழந்தை டாப் நடிகைகளில் ஒருவர்! யாருனு பாருங்க...
தாய் - மகள் கொலை., நகைகள் மாயம்.. தூத்துக்குடியில் கொடூரம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம், மேலநம்பிபுரம், கீழத்தெருவில் வசித்து வருபவர் பூவன். இவரின் மனைவி சீதாலட்சுமி (வயது 75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூவன் இயற்கை எய்தினார்.
இதையும் படிங்க: எம்புள்ள போயிட்டான், கொன்னவன் வீட்டுக்கு பாதுகாப்பா? - தாயின் கண்ணீர் குமுறல்.. திணறித்தவித்த காவல்துறை.!
தம்பதிகளிமகள் ராமஜெயந்தி (வயது 47). இவர் தனது கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வைக்கிறார். நேற்று மாலை நேரத்தில் தாய்-மகள் வீட்டில் இருந்தனர். நீண்ட நேரம் இவர்கள் வீட்டில் நடமாட்டம் இல்லை.
தாய்-மகள் மர்ம மரணம்
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, இருவரும் சடலமாக இருந்தனர். பின் இதுகுறித்து எட்டயபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
சடலமாக மீட்கப்பட்ட இருவரும் தலையணை அழுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அணிந்திருந்த 10 சவரன் நகைக்கும் மாயமானது தெரியவந்தது. இதனால் நகைக்காக கொலை நடந்ததா? என விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்சியர் உத்தரவுக்கே மதிப்பில்லையா? ஸ்ரீவைகுண்டத்தில் வீதியில் இறங்கிய பொதுமக்கள்.. கடும் வாக்குவாதம்.!