கிருஷ்ணகிரி மலைக்கோட்டையில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்; குற்றவாளிகளின் செல்போனில் பகீர் வீடியோ.. விசாரணையில் அதிர்ச்சி.!



in Krishnagiri Fort Woman Rape Case 23 Feb 2025 Update 

 

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிறுத்தம், மலைக்கோட்டைக்கு கடந்த 19ம் தேதி வருகை தந்த 35 வயது ஆண், 30 வயது பெண் மலை உச்சிக்கு சென்றனர். அங்கு போதையில் இருந்த 4 பேர் கும்பல் இருவரையும் மிரட்டி பணம், நகையை புரிந்துகொண்டது. மேலும், பெண்ணை மிரட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். 

மலைக்கு கீழே அழுதுகொண்டு வந்த இருவரிடமும் அக்கம் பக்கத்தினர் விசாரிக்க, இருவரும் புகார் கூட கொடுக்காமல் சென்றுவிட்டனர். பின் இதுதொடர்பாக கிருஷ்ணகிரி நகர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் திருப்பத்தூரைச் சேர்ந்த 35 வயது ஆண் மற்றும் 30 வயது பெண்ணிடம் விசாரணை நடத்தி புகாரை பெற்றுக்கொண்டனர். 

இதையும் படிங்க: 2 பேர் கும்பலால் பெண் பலாத்காரம், வீடியோ எடுத்து கொடுமை.. கிருஷ்ணகிரி மலையில் நடந்த பகீர் சம்பவம்.!

Krishnagiri

குற்றவாளிகள் கைது

இவர்களின் புகாரின் பேரில் கலையரசன் (21), அபிஷேக் (20), சுரேஷ் (22), நாராயணன் (21) ஆகியோர் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. சுரேஷ் & நாராயணன் பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர். பிற இருவரும் வீடியோ எடுத்துள்ளனர். நான்கு பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், சுரேஷ் சுட்டு பிடிக்கப்பட்டார், நாராயணன் தப்பிச் செல்ல முற்பட்டு, கீழே விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டார் 

விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கைதானவர்களிடம் விசாரித்து, சுரேஷின் செல்போன் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சுரேஷ் பல பெண்களை பலாத்காரம் செய்த அதிர்ச்சி வீடியோ இருந்தது. மலை உச்சிக்கு ஜோடியாக வரும் பெண்கள் முதல் தனியாக வரும் பெண்கள் என மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது அம்பலமானது. 
 

இதையும் படிங்க: கற்களால் தாக்கி நகை, செல்போன், பணம் பறிப்பு.. கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. 3 சிறார்கள் அதிர்ச்சி செயல்.!