மிதிவண்டியில் சென்றபோது சோகம்.. சக்கரத்தில் சிக்கி 14 வயது சிறுவன் மரணம்.. பரிதவிப்பில் தாய்.!



  in Chennai puliyanthopu 14 Year Old Boy Dies an Accident 

சென்னையில் உள்ள புளியந்தோப்பு, படாளம், போகிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். செல்வத்துக்கு திருமணம் முடிந்து மனைவி, சதீஷ் (வயது 14) என்ற மகன் இருந்தனர். செல்வத்தின் மறைவுக்கு பின்னர், அவரின் மனைவி மற்றும் மகன் தனியாக வசித்து வருகிறார்கள். 

நேற்று இரவு சுமார் 9 மணியளவில் சிறுவன் சதீஷ், தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவ்வழியாக டாடா ஏஸ் வாகனம், மிதிவண்டியில் சாலையோரம் சென்ற சிறுவனின் பக்கவாட்டு பகுதியில் மோதியது. இந்த விபத்தில், நிலைதடுமாறி சிறுவன் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கினார். 

accident

படுகாயமடைந்து பறிபோன உயிர்

சிறுவன் சாலையில் விழுந்த அடுத்த நொடியே அவரின் தலையில் வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: ஈரோடு: அலட்சியமாக சாலையை கடந்ததால் நேர்ந்த சோகம்: டூவீலர் மோதி, கார் சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி.!

மேலும், விசாரணையில், மதாரத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த ஓட்டுநர் சதீன் இயக்கிய வாகனம் ஏற்படுத்திய இப்பதில் சிறுவன் சிக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் சதீனை கைது செய்தனர். கணவரை இழந்து மகனுடன் வசித்து வந்த தாய், தற்போது மகனையும் இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 6 மாதம் போராடி பிரிந்த தலைமை காவலரின் உயிர்; விபத்தில் சிக்கி நடந்த சோகம்.!