தண்டவாளத்தை அலட்சியமாக கடக்க முயற்சி; எக்ஸ்பிரஸ் இரயில் மோதி 18 வயது நபர் பலி.!



in Chennai Avadi Man Died Train Hits 

 

இரயில் நிலையங்களை நடைமேடையில் கடப்பது மட்டுமே நல்லது. 

சென்னையில் உள்ள ஆவடி, சேக்காடு, அண்ணா நகரில் வசித்து வருபவர் விமலன் (வயது 18). இவர் கியாஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இதையும் படிங்க: "புல்லா குடி, ஆக்சிலேட்டரை இறுக்கி பிடி" - 100ல் போனதால் 23 வயதிலேயே 108 வந்தும் பறிபோன உயிர்.!

நேற்று முன்தினம் இரவில், பணியை முடித்துக்கொண்ட விமலன், இந்து கல்லூரி இரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு நடைமேடை வழியே தண்டவாளத்தை கடக்க முற்படவில்லை.

chennai

File Pic

மாறாக தண்டவாளத்துக்கு இடையே நடந்து சென்றார். அப்போது, சென்னை சென்ட்ரல் நோக்கி பயணம் செய்த அதிவிரைவு இரயில் மோதி உயிரிழந்தார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த ஆவடி இரயில்வே காவல் துறையினர், விமலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: 13 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!