அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; ஞானசேகரனிடம் விடிய-விடிய விசாரணை.!



in Chennai Anna University Case Update on 21 Jan 2025 

 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 19 வயது மாணவி, ஞானசேகரன் என்ற பிரியாணி கடை நடத்தி வந்த நபரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விஷயம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு புலனாய்வு குழு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்துகிறது. 

ஞானசேகரன் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்ததும் புழல் சிறையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய 7 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை: விஜிபி தீம் பார்க்கில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; பணியாளருக்கு அதிகாரிகள் வலைவீச்சு.!

காவல்துறையினர் தீவிர விசாரணை

இந்நிலையில், நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டுள்ள ஞானசேகரனினிடம் விடிய-விடிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அவர் தற்போது அண்ணா நகர் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்படவுள்ளார். 

சிறப்பு புலனாய்வு குழு அண்ணா நகர் துணை ஆணையர் சினேகா பிரியா தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தேவைப்படும் பட்சத்தில் பிற இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அழைத்துசென்றும் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மாஞ்சா நூலால் உயிருக்கு போராடும் பெண் காவலர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!