மோகத்தால் ஏற்பட்ட காதல்! விஷயம் வெளியே கசிந்ததால் இருவரும் எடுத்த விபரீத முடிவு!
மோகத்தால் ஏற்பட்ட காதல்! விஷயம் வெளியே கசிந்ததால் இருவரும் எடுத்த விபரீத முடிவு!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சத்யா என்ற இளம் பெண்ணிற்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சத்யாவிற்கும் அதேபகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இவர்களின் உறவு நாளடைவில் வெளியே தெரியவந்ததை அடுத்து சத்யா - முருகேசன் இருவரும் ஒன்றாக கிளம்பி ராமேஸ்வரம் சென்றுள்ளனர். அங்கு ஒரு விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அறையின் கதவை உடைத்துளனர்.
இந்நிலையில் சத்யா - முருகேசன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.