என் மனைவி மயங்கி விழுந்துவிட்டார்! மருத்துவமனைக்கு தூக்கி சென்ற கணவன்! இறுதியில் அம்பலமான அதிரவைக்கும் உண்மை!

என் மனைவி மயங்கி விழுந்துவிட்டார்! மருத்துவமனைக்கு தூக்கி சென்ற கணவன்! இறுதியில் அம்பலமான அதிரவைக்கும் உண்மை!



husband-killed-wife-for-doubting-in-her-character

மயிலாடுதுறை அதிகாடு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஐயப்பன். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அகிலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு இருகுழந்தைகள் உள்ளனர். ஐயப்பனுக்கு கடுமையான குடிபழக்கம் உள்ளது. இந்த நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் ஐயப்பன், மனைவி அகிலாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

 இந்தநிலையில் ஐயப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி அகிலா திடீரென மயக்கமடைந்து விழுந்துவிட்டதாக அகிலாவின் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்துவிட்டு,  மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அகிலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு பதறியடித்து ஓடிவந்த அகிலாவின் உறவினர்கள் அவரது மரணத்திற்கு ஐயப்பன்தான் காரணம் என கூறி கதறி அழுதுள்ளனர். 

Murder

அதனை தொடர்ந்து போலீசார் ஐயப்பனிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில்,  இறுதியில் அவர் தான்தான் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை  கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.