நெல்லையில் பயங்கரம்.. பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவர் பலி..!
நெல்லையில் பயங்கரம்.. பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவர் பலி..!
நெல்லை மாவட்டம் பெருமாள்புரம் நீச்சல் குளம் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் மாதேஷ் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில் மாதேஷ் நெல்லை பெருமாள்புரம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று மின்னல் வேகத்தில் மாதேஷ் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிபயங்கரமாக மோதியது. இதில் மாதேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த நெல்லை போக்குவரத்து புலனாய்வு போலீசார் மாதேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து மாநகரப் புலனாய்வு போக்குவரத்து போலீஸார் நடத்திய விசாரணையில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் நெல்லை மாவட்டம் இட்டேரியை சேர்ந்த முத்தையா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தப்பி ஓடிய முத்தையாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.