இன்று இரவு இந்த 23 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....!!!
தமிழகத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பாதை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை தீவிரமாகும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இரவில் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் வானிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் தேவையற்ற வெளிப்பயணங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இடி மின்னல் ஏற்படும் நேரங்களில் கூடுதல் கவனம் தேவை என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: BREAKING: மீண்டும் வெளுத்து வாங்க போகும் மழை! தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்
வானிலை மையத்தின் தகவலின்படி, கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தருமபுரி, கன்னியாகுமரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் சூழலும் உருவாகலாம் என கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுரை
இடி மின்னலின் போது மரங்களின் அடியிலும் திறந்தவெளி பகுதிகளிலும் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மின்கம்பங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வானிலை எச்சரிக்கை காரணமாக மாவட்ட நிர்வாகங்களும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அவசர தேவைகள் இல்லையெனில் மக்கள் வீட்டிலேயே இருப்பது பாதுகாப்பாக இருக்கும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மக்கள் கவனத்திற்கு.... தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இரவு முழுவதும் பெய்ய போகும் பேய் மழை!