இதோ!! வந்தாச்சு அரசாணை!! மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு: அரசாணை வெளியீடு!
இதோ!! வந்தாச்சு அரசாணை!! மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு: அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களை போலவே தமிழக மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60 என உயர்த்தப்பட்டது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 என நிர்ணயிக்கப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களை போலவே தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் போலவே, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக இருந்த நிலையில் தற்போது ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டிருப்பது தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.