அஜித்திற்காக அவரது மனைவி ஷாலினி செய்த செயல்.! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!?
குடிகார கணவனால் மனமுடைந்த காதல் மனைவி தற்கொலை.. பெற்றோரை எதிர்த்த 2 வருடத்தில் சோகம்.!
குடிகார கணவனால் மனமுடைந்த காதல் மனைவி தற்கொலை.. பெற்றோரை எதிர்த்த 2 வருடத்தில் சோகம்.!
கணவர் தினமும் மதுபோதையில் வருவதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டார். காதல் திருமணம் செய்த 2 வருடத்தில் பெண் தற்கொலை செய்த சோகம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனிராவுத்தர் குளம் கிராமத்தில் வசித்து வந்தவர் சவிதா (வயது 24). இவர் பொறியாளராக இருந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தனர்.
லோகநாதன் சித்தோடு பகுதியில் செயல்பட்டு வந்த மதுபான குடோனில், சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்ததால், அதனை சவிதா கண்டித்து இருக்கிறார். தினமும் வேலையை முடித்துவிட்டு வரும் லோகநாதன், மதுபோதையில் வீட்டிற்கு வருவது வழக்கம்.
இதனால் கணவன் - மனைவி சண்டை ஏற்படும் நிலையில், சவிதா காதல் கணவரின் செயல்பாடுகளால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவும் மதுபோதையில் லோகநாதன் வந்ததால், தம்பதிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், சவிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இரவில் போதையில் உறங்கிவிட்டு, காலையில் எழுந்து பார்க்கும் போது மனைவி தற்கொலை செய்திருப்பதை கண்டு லோகநாதன் அதிர்ச்சியாகியுள்ளார். பின்னர், இதுகுறித்து வீரப்பன்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சவிதாவுக்கு திருமணம் நடந்து 2 வருடமே ஆவதால், ஈரோடு ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது.