யானை தாக்கி திமுக கவுன்சிலர் மற்றும் மகன் பலி.! பதறிப்போன மு.க.ஸ்டாலின்.!

யானை தாக்கி திமுக கவுன்சிலர் மற்றும் மகன் பலி.! பதறிப்போன மு.க.ஸ்டாலின்.!



elephant killed dmk councillor

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அதனருகில் தொழிலாளர்களின் குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இங்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.

பந்தலுார் அருகே, சேரங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் கூடலுார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர், நேற்று இரவு, 7மணிக்கு, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது வீடு அருகே அவரது மகன் பிரசாந்தை தாக்கிவிட்டு வந்த யானை, ஆனந்தராஜையும் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தராஜ், மகன் பிரசாந்த் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களது மரணம் குறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கூடலூரில் காட்டு யானை தாக்கி கவுன்சிலர் ஆனந்தராஜும் அவரது மகனும்  மரணமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது! அதிமுக அரசின் அலட்சியத்தால் கூடலூரில் இப்படி 10 பேர் பலி! கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்திடுக! என தெரிவித்துள்ளார்.