ஆளுநர் உரையுடன் தொடங்கியது சட்டப்பேரவை கூட்டம்! மொத்தமாக வெளியேறிய திமுக!
ஆளுநர் உரையுடன் தொடங்கியது சட்டப்பேரவை கூட்டம்! மொத்தமாக வெளியேறிய திமுக!
தமிழகத்தில் 15-ஆவது சட்டப்பேரவையின் எட்டாவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை தொடங்கினார்.
ஆளுநர் பேசத்தொடங்கியதும் ஸ்டாலினும் எழுந்து நின்று சிஏஏ, எழுவர் விடுதலை, நீட் தேர்வு, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி பேசினார். இதனையடுத்து அவரை அமருமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
சட்டசபையில் ஆளுநர் பேசிக்கொண்டிருக்கும்போது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேச அனுமதிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக கூறினார்.