அதிகாலையில் திமுகவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த தொண்டர்கள்!
அதிகாலையில் திமுகவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த தொண்டர்கள்!
திருவொற்றியூர் கே.வி.கே குப்பத்தில் வசிக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் திருவொற்றியூர் கே.வி.கே குப்பத்தில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார்.
இந்தநிலையில் சென்னை திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி .பி.சாமி (57) உடல்நலக்குறைவால் கே.வி குப்பத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். திமுக முன்னாள் அமைச்சரான இவர் திமுக மீனவரணி செயலாளராக உள்ளார்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது, மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார் கே.பி.பி.சாமி. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சாமி, கே.வி.குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.