பாஜக பிரமுகர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை; குழந்தைகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு சோகம்..!

பாஜக பிரமுகர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை; குழந்தைகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு சோகம்..!



Dindigul BJP Youth Wing Admin Suicide with Wife 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு, அருணாச்சலபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் (35). இவர் பாஜக மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். வத்தலகுண்டு பகுதியில் செல்போன் கடையும் வைத்து நடத்தி வருகிறார். 

மணிகண்டனின் மனைவி ஈரோடை சேர்ந்த சிவதர்ஷினி (29). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், அதனைத்தொடர்ந்து திருமணம் செய்து 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். 

தம்பதிகளுக்கு சாய் என்ற 10 வயது மகனும், சாய் சிரஞ்சி என்ற 4 வயது மகளும் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது பட்டிவீரன்பட்டி எம்.வாடிப்பட்டி பகுதியில் வீடுகட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். 

நேற்று காலை மணிகண்டன் 2 குழந்தையையும், கடையில் வேலை செய்யும் நபரின் உதவியுடன் சிவதர்ஷினியின் தாய் அனுஷியாவின் வீட்டிற்கு ஈரோட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். கடை ஊழியரும் ஈரோட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊர் வந்துள்ளார். 

பேரன் - பேத்தி எவ்வித தகவலும் இன்றி வந்துள்ளதால் பதறிப்போன அனுசுயா, மகளை தொடர்புகொண்டபோது போனை எடுக்கவில்லை. மணிகண்டனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டும் பலனில்லை. இதனால் அனுசுயா எம்.வாடிபட்டியில் வசித்து வரும் உறவினருக்கு தொடர்பு கொண்டு விசயத்தை தெரிவித்துள்ளார்.

அவர்கள் மணிகண்டனின் வீட்டிற்கு சென்றுபார்த்தபோது வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது தம்பதிகள் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர். பின் இதுகுறித்து பட்டிவீரன்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தம்பதிகள் இருவரும் தற்கொலைக்காக ஏற்கனவே திட்டமிட்டு குழந்தைகளை சிவதர்ஷினியின் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு கடன் தொல்லை இருந்ததா? வேறு காரணத்தால் தற்கொலை செய்துகொண்டனரா? என விசாரணை நடந்து வருகிறது.