குறுக்கே வந்தவரை ஓங்கி அடித்த பட நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
தமிழகத்தில் 3-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு! உயிரிழப்பும் அதிகரிப்பு!
தமிழகத்தில் 3-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு! உயிரிழப்பும் அதிகரிப்பு!

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால் சில தளர்வுகளுடன் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்திலும் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 533 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மொத்தமாக கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,706 ஆக அதிகரித்துள்ளது.