அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா! அந்த தெரு முழுவதும் மூடப்பட்டது!

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா! அந்த தெரு முழுவதும் மூடப்பட்டது!



Corona in chennai

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்தநிலையில், கொரோனவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அணைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்தநிலையில், சென்னை மேற்குமாம்பழம் அருகே ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.  போஸ்டல் காலனி இரண்டாம் தெருவில் உள்ள  ஒருவருக்கு ( அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்) கொரோனா பாதித்தது இருந்தது உறுதிப்படுத்தியபிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

corona

இப்போது அந்த தெருவின் ஒரு பகுதி மூடப்பட்டது. அந்த தெரு முழுவதும் மாநகராட்சி ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டு , ஸ்பிரே மூலம் மருந்து தெளித்து வருகிறார்கள். இதனால் வீட்டிலிருந்து யாரும் வெளியே  கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும் வரும் மூன்று நாட்கள் சாலையில் நடந்தோ அல்லது வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.