15 வயது சிறுமி மாயமான வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. தோட்டத்தில்., நடந்த கொடூரம்..!
15 வயது சிறுமி மாயமான வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. தோட்டத்தில்., நடந்த கொடூரம்..!
பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுமி மாயமான வழக்கில், அவரை கடத்தி குழந்தை திருமணம் செய்தது அம்பலமானது. கடத்தலில் ஈடுபட்டு குழந்தை திருமணம் செய்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி பகுதியை சார்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 30 ஆம் தேதி திடீரென மாயமான நிலையில், அவரை பல இடங்களில் தேடியும் காணாததால் பெற்றோர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில், விசாரணையில் அப்பகுதியை சார்ந்த பத்திரப்பன் (வயது 24) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது உறுதியானது. இதனால் பத்திரப்பன் மற்றும் சிறுமியை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சிறுமி பத்திரப்பனிடம் இருந்து தப்பி வீட்டிற்கு வந்துள்ளார். அவரிடம் பெற்றோர் விசாரணை செய்ததில், பத்திரப்பன் தன்னை ஏமாற்றி நாமக்கல் அருகேயுள்ள மோகனூருக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு திருமணம் செய்து, தோட்டத்தில் அடைத்து வைத்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பிய சிறுமி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இந்த விஷயத்தை மாணவியின் பெற்றோர் காவல் துறையினரிடம் தெரியப்படுத்தவே, பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த பத்திரப்பனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.