கல்லூரி சுற்றுச்சுவர் கட்டுமான பணியில் சோகம்; திடீரென சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பரிதாப பலி.!

கல்லூரி சுற்றுச்சுவர் கட்டுமான பணியில் சோகம்; திடீரென சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பரிதாப பலி.!



 Coimbatore College Wall Collapse 5 Died 

 

கோயம்புத்தூர் நகரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் விழுந்த விபத்தில், கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 

முதற்கட்ட விசாரணையில் கல்லூரியில் முன்னதாகவே இருந்த சிறிய பக்கவாட்டுக்கு சுவருக்கு அருகில், 10 அடி உயரம் கொண்ட பக்கவாட்டுச் சுவர் கட்டும் பணியாளனது நடைபெற்றது. 

Coimbatore

பழைய சுவர் திடீரென தொழிலாளர்களின் மீது விழுந்துவிடவே, உயிரிழந்தவர்களின் மூன்று பேர் ஆந்திர மாநிலத்தில் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மேற்குவங்கத்தை சார்ந்தவர் என்றும் தகவல் தெரியவந்துள்ளது. 

காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஒப்பந்ததாரரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.