சமையல் வேலை செய்து கொண்டிருந்த தாய்.! வீட்டில் இருந்த மாத்திரைகளை எடுத்து அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட 1½ வயது குழந்தை.!

சமையல் வேலை செய்து கொண்டிருந்த தாய்.! வீட்டில் இருந்த மாத்திரைகளை எடுத்து அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட 1½ வயது குழந்தை.!



child eate tabletes

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த குமரேசன்-கனிமொழி தம்பதிக்கு 1½ வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்தநிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு கனிமொழி, தனது குழந்தையை வீட்டில் விளையாட வைத்துவிட்டு, சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது குழந்தை வீட்டில் இருந்த மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டுள்ளது. இதனால் குழந்தை சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளது. குழந்தாய் சாப்பிட்ட மாத்திரை, இரும்பு சத்து மாத்திரை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கனிமொழி மற்றும் குமரேசன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

குழந்தையின் உடல்நிலை மோசமானதால், குழந்தையை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 36 மணி நேரம் தீவிர கண்காணிப்பு பிரிவில் தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு குழந்தை பவ்யா தற்போது, உடல் நிலை முன்னேற்றம் அடைந்து மிகவும் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.