17 வயது சிறுமி 11 பேரால் 3 நாட்களாக பலாத்காரம்; தாம்பரத்தில் நடந்த பகீர் சம்பவம்.! 

17 வயது சிறுமி 11 பேரால் 3 நாட்களாக பலாத்காரம்; தாம்பரத்தில் நடந்த பகீர் சம்பவம்.! 



Chennai Tambaram Minor Girl Raped 

 

அறியா வயதில் தொழில்நுட்ப உலகால் மடைமாறிப்போன தடம், சிறுமியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய சோகம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி தனது 18 வயது தோழியுடன் புளியந்தோப்பில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளார். 

அங்கு மற்றொரு 17 வயது பெண்ணுடன் சேர்ந்து சுற்றித்திரிந்த நிலையில், அப்பகுதியை சார்ந்த சிறுவர்கள் மற்றும் வாலிபர்களோடு கடந்த மூன்று நாட்களாக பாலியல் ரீதியான உறவில் இருந்ததாக தெரிய வருகிறது. 

chennai

இது குறித்து விசாரிக்கையில் சிறுமியின் விருப்பத்தின் பேரில் அனைத்தும் அரங்கேறியது தெரியவந்தது. சிறுமிக்கு 17 வயதாவதால் அவருடன் பாலியல் ரீதியான உறவில் இருந்த நபர்களின் மீது போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேலும் 15 வயது, 17 வயது என ஆறு சிறுவர்கள் உட்பட 11 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.