தம்பியை அடித்த சோகத்தால் அக்கா விபரீத முடிவு?.. 8 வயது சிறுமியின் அதிர்ச்சி செயலால் கதறிய பெற்றோர்.. பறிபோன உயிர்.!

தம்பியை அடித்த சோகத்தால் அக்கா விபரீத முடிவு?.. 8 வயது சிறுமியின் அதிர்ச்சி செயலால் கதறிய பெற்றோர்.. பறிபோன உயிர்.!



Chennai Maduravoyal Minor Girl suicide

 

சரிவர படிக்காத தம்பிய ஆத்திரத்தில் அடித்துவிட்டேன் என தந்தைக்கு தொடர்பு கொண்டு பேசிய மகள், இரவில் சடலமாக தூக்கில் தொங்கியதால் தந்தை பேரதிர்ச்சிக்கு உள்ளாகினார்.

சென்னையில் உள்ள மதுரவாயல், சீமாத்தம்மன் நகரில் வசித்து வருபவர் முருகன் (வயது 37). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். முருகனின் மனைவி புனிதா (வயது 32)ல். இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 

தம்பதிகளுக்கு ஷர்மி என்ற 12 வயது மகளும், கமலேஷ் என்ற 6 வயது மகனும் இருக்கின்றனர். சிறுமி ஷர்மி அப்பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பும், கமலேஷ் 2ம் வகுப்பும் பயின்று வருகிறார்கள். 

சம்பவத்தன்று ஷர்மி தனது தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தம்பி சரியாக படிப்பது இல்லை. அதனால் அவனை முடித்துவிட்டேன் என கூறியுள்ளார். மகளை வீட்டிற்கு சென்று சமாதானம் செய்யலாம் என வேலை முடிந்து இரவில் முருகன் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்.

அப்போது, மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அலறிய முருகனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். ஷர்மியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது அவர் உயிரிழந்ததும் அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக மதுரவாயல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.